Thursday 16 June 2011
இன்றைய உதயனில்
Posted by
arasakesarippillayar
at
10:01
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Saturday 21 May 2011
அரசகேசரிப் பிள்ளையார் கோயிலில் இரவிரவாக நடக்கிற திருப்பணி வேலைகள்..
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் திருக்கோயிற் குடமுழுக்கு விழாவை ஒட்டி இரவிரவாக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்று 15.05.2011 ஞாயிற்றுக்கிழமை இரவு 09 மணிக்கும் தொடர்ந்து கொங்கிறீற் போடும் வேலைகள்நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆலய தொண்டர்கள் பலரும்.. தொழிலாளர்களும்இணைந்து செய்த இவ்வேலைகள் இன்று இச்செய்தி எழுதும் வரை நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.
புலம்பெயர் நர்டுகள் சிலவற்றில் உள்ள சிலர் சில தவறான கருத்துக்களைப்பரப்பி வருவதாகவும் இதன் போது ஆலய அறங்காவலர் சபையில் முக்கிய பொறுப்பு வகிக்கிற ச.க.முருகையா கவலை வெளியிட்டார். ஆகவே, உண்மையை எடுத்துரைக்க வேண்டிய தேவை இருப்பதாயும் சொன்னார். இதே வேளை இந்தியாவிலிருந்து வரப்பிரதசர்மா ஊடாக, கும்பாபிஷேகத் திரவியங்கள் கொண்டு வரப்படவுள்ளதாயும் தெரியவருகிறது.
இப்பணிகளில் எல்லா அடியவர்களும் இணைந்து பணியாற்றற வேண்டும் என்பதே எமது ஆவலாகும். இன்று நள்ளிரவு வேளையில் எடுத்த சில படங்கள் இணைக்கப்பட:டுள்ளன.
தி.மயூரகிரி சர்மா
புலம்பெயர் நர்டுகள் சிலவற்றில் உள்ள சிலர் சில தவறான கருத்துக்களைப்பரப்பி வருவதாகவும் இதன் போது ஆலய அறங்காவலர் சபையில் முக்கிய பொறுப்பு வகிக்கிற ச.க.முருகையா கவலை வெளியிட்டார். ஆகவே, உண்மையை எடுத்துரைக்க வேண்டிய தேவை இருப்பதாயும் சொன்னார். இதே வேளை இந்தியாவிலிருந்து வரப்பிரதசர்மா ஊடாக, கும்பாபிஷேகத் திரவியங்கள் கொண்டு வரப்படவுள்ளதாயும் தெரியவருகிறது.
இப்பணிகளில் எல்லா அடியவர்களும் இணைந்து பணியாற்றற வேண்டும் என்பதே எமது ஆவலாகும். இன்று நள்ளிரவு வேளையில் எடுத்த சில படங்கள் இணைக்கப்பட:டுள்ளன.
தி.மயூரகிரி சர்மா
Posted by
arasakesarippillayar
at
13:34
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Thursday 14 April 2011
கை கொடுக்குமா? கர வருஷம்
‘கர’என்றால் கை என்று அர்த்தம். இந்த ஆண்டு பிறக்கிற புதிய சித்திரைப்புத்தாண்டுக்கும் கர வருஷம் என்று பெயர். கை கொடுப்
பது என்பது இன்றைக்கு நமக்கு ஐரோப்பிய நாகரீக வருகையால் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிற- உறவை வெளிக்காட்டுகிற ஒரு கலாச்
சாரமாக இருக்கிறது.
ஆனாலும் நம் பாரம்பரியத்தில் கை கொடுத்தல் என்பது கை கொடுத்து ஒருவனுக்கு ஒருவன் உதவி செய்வதையே குறித்து நின்றது. ஆகவே தான், நம்பிய ஒருவன் உதவி செய்ய மறுக்கிற போது ‘அவன் கை விட்டு விட்டான்’ என்றும் ‘கை கழுவி விட்டான்’ என்றும் கூட சொல்கிறோம்.
Posted by
arasakesarippillayar
at
04:33
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
கட்டுரை
Wednesday 23 March 2011
"கருணை நிறை காமாட்சி" நூல் வெளியீடு
நீர்வை.தி.மயூரகிரி சர்மாவால் எழுதப் பெற்ற கருணை நிறை காமாட்சி என்ற நூல் நீர்வேலி காமாட்சியம்பாள் இந்து பரிபாலன சபையினரால் வெளியீடு செய்யப்பெற உள்ளது. நாளை மறுதினம் மாலையில் இந்நிகழ்வு நீர்வேலி வடக்கு காமாட்சியம்பாள் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
பேராசிரியர். கலாநிதி.தி.வேல்நம்பி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நல்லையாதீன குருமஹாசந்நிதானம், முதுநிலை விரிவுரையாளர் திருமதி சுகந்தினி முரளீதரன், நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி முதல்வர் இ.குணநாதன், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர். ச.லலீசன், ஆகிய பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Posted by
arasakesarippillayar
at
12:35
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Sunday 13 March 2011
நீர்-வில் தான் நீர்வேலியானதா?
நீர்-வில் தான் நீர்வேலியானதா? ஒரு சிந்தனைக்குரிய ஆய்வு
இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர் தன் தர்மபத்தினியாகிய சீதாதேவியை மீட்கும் பொருட்டு, இராவணனுடன் யுத்தம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான வானரசேனையுடன் இலக்குவன், ஹநுமான் மற்றும் விபீஷணனின் துணையுடன் சேது பாலம் அமைத்து இலங்கைக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு சேது பந்தம் அமைத்து இலங்கை வந்த ஸ்ரீ ராமரும் அவர் தம்சேனையும் இராவணனையும் அவனோடு கூடிய அசுர கூட்டத்தையும் துடைத்தழித்தனர். சீதாதேவி மீட்கப்பட்டாள்.
இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர் தன் தர்மபத்தினியாகிய சீதாதேவியை மீட்கும் பொருட்டு, இராவணனுடன் யுத்தம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான வானரசேனையுடன் இலக்குவன், ஹநுமான் மற்றும் விபீஷணனின் துணையுடன் சேது பாலம் அமைத்து இலங்கைக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு சேது பந்தம் அமைத்து இலங்கை வந்த ஸ்ரீ ராமரும் அவர் தம்சேனையும் இராவணனையும் அவனோடு கூடிய அசுர கூட்டத்தையும் துடைத்தழித்தனர். சீதாதேவி மீட்கப்பட்டாள்.
Posted by
arasakesarippillayar
at
03:52
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest