‘கர’என்றால் கை என்று அர்த்தம். இந்த ஆண்டு பிறக்கிற புதிய சித்திரைப்புத்தாண்டுக்கும் கர வருஷம் என்று பெயர். கை கொடுப்
பது என்பது இன்றைக்கு நமக்கு ஐரோப்பிய நாகரீக வருகையால் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிற- உறவை வெளிக்காட்டுகிற ஒரு கலாச்
சாரமாக இருக்கிறது.
ஆனாலும் நம் பாரம்பரியத்தில் கை கொடுத்தல் என்பது கை கொடுத்து ஒருவனுக்கு ஒருவன் உதவி செய்வதையே குறித்து நின்றது. ஆகவே தான், நம்பிய ஒருவன் உதவி செய்ய மறுக்கிற போது ‘அவன் கை விட்டு விட்டான்’ என்றும் ‘கை கழுவி விட்டான்’ என்றும் கூட சொல்கிறோம்.