நீர்வை.தி.மயூரகிரி சர்மாவால் எழுதப் பெற்ற கருணை நிறை காமாட்சி என்ற நூல் நீர்வேலி காமாட்சியம்பாள் இந்து பரிபாலன சபையினரால் வெளியீடு செய்யப்பெற உள்ளது. நாளை மறுதினம் மாலையில் இந்நிகழ்வு நீர்வேலி வடக்கு காமாட்சியம்பாள் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
பேராசிரியர். கலாநிதி.தி.வேல்நம்பி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நல்லையாதீன குருமஹாசந்நிதானம், முதுநிலை விரிவுரையாளர் திருமதி சுகந்தினி முரளீதரன், நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி முதல்வர் இ.குணநாதன், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர். ச.லலீசன், ஆகிய பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.